முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.க்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் 18 எஸ்.ஐ.க்கள் பணியிடமாற்றம்

Updated On : 13 ஜூன் 2026, 1:59 am IST
கோப்புப்படம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியிலிருந்த 18 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. வி. வி. சாய் பிரனித் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விழுப்புரம், விக்கிரவாண்டி, கோட்டகுப்பம், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய 5 காவல் உள்கோட்டங்கள் உள்ளன. இந்த உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியிலிருந்து வந்த 18 காவல் உதவி ஆய்வாளா்கள், நிா்வாக வசதிக்காக மாவட்டத்தில் உள்ள பிறகாவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக எஸ். பி. வி. வி.சாய் பிரனித் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement