கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர், கடலூரில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரகத்தில்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர், கடலூரில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் விஏஓக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சொத்து உள்பிரிவு தொடர்பான சான்றிதழ்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கூடுதல் கிராமங்களை கவனிப்பதற்கு கூடுதலாக பொறுப்பூதியம் வழங்க வேண்டும். கணினி வசதிகளை பயனுள்ள வகையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.
இதையொட்டி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.ரவி தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.