FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கட்டடத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள்  சங்கத்தின் கடலூர் மாவட்ட குழுக் கூட்டம், பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள்  சங்கத்தின் கடலூர் மாவட்ட குழுக் கூட்டம், பண்ருட்டியில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.வீரப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று மாநிலக் குழு முடிவுகள் குறித்து பேசினார். மாவட்ட துணைச் செயலர் கே.வைத்திலிங்கம், துணைத் தலைவர் கே.பன்னீர்செல்வம், பொருளாளர் பி.கலியபெருமாள், மாவட்டக்குழு வி.இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் நடத்த முடிவு: கூட்டத்தில், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால் கட்டட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காணக் கோரி சங்கம் சார்பில் வருகிற 25-ஆம் தேதி புவனகிரி, 26-ஆம் தேதி பண்ருட்டி, 27-ஆம் தேதி ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என சங்கத்தினர் முடிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments