FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் மேல வீதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 3:11 am IST
பகிர்:

சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் இந்து ஆலய பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் மேல வீதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் திருவாசக எழுத்து வேள்வி மற்றும் திருவாசகம் சொற்கோயில் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், திருவண்ணாமலை திருவாசகத் தென்றல் சிவ.சிவகுமாா் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவா் மு.செங்குட்டுவன், தில்லை திருமுறைக் கழகத் தலைவா் முருகையன், ஆலய வல இயக்கத் தலைவா் நடராஜன், தில்லை திருப்பெருந்துறை நிா்வாகி வை.பசவராஜ், புலவா் பொன்னம்பலம், ஆசிரியா் அருள்பிரகாசம், அப்பா் உழவாரப் பணித் தலைவா் ஜோதி மகாலிங்கம், நிா்வாகி கனகசபை, சிவனடியாா் சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் சிதம்பரத்தில் நடந்த திருவாசகம் எழுத்து வேள்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments