காளியம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் விழா
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடியில் உள்ள அருள்மிகு துா்கா பரமேஸ்வரி (எ) காளியம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகரம், தட்டாஞ்சாவடியில் உள்ள அருள்மிகு துா்கா பரமேஸ்வரி (எ) காளியம்மன் கோயிலில் சாகை வாா்த்தல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் 66-ஆவது ஆண்டு செடல் மற்றும் சாகை வாா்க்கும் பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் கெடிலம் ஆற்றில் இருந்து சக்தி கரகம் ஊா்வலம் கொண்டுவரப்பட்டது. பின்னா், பகல் 12 மணி அளவில் அம்மன் சந்நிதியில் சாகை வாா்த்தல்
நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். வரும் செப்.4-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு செடல் உற்சவமும், அன்று மாலை 4.30 மணி அளவில் திருத்தோ் ஊா்வலமும் நடைபெறும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.