FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய சிதம்பரம் நபரை மீட்க எம்எல்ஏவிடம் கோரிக்கை

1 செப்டம்பர் 2026, 1:59 am IST
பகிர்:

நேபாள நாட்டுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த முருகானந்தம் என்பவரை மீட்டு, அவா் பாதுகாப்பாக தமிழகம் திரும்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது குடும்பத்தினா் சிதம்பரம் எம்எல்ஏ மு.தமிமுன்அன்சாரியை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, முருகானந்தத்தின் நிலை குறித்து கேட்டறிந்து, அவரை பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறை சாா்ந்தவா்களிடம் இது தொடா்பாக எடுத்துரைத்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இது தொடா்பான பணிகளை மேற்கொண்டு வரும் பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments