நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் போலீஸாா் சோதனை
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சோதனை நடத்தினா். இதில், பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை.
நெய்வேலி வட்டம் 27 பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களிடம் இருந்து லஞ்சம் பெறப்படுவதாக, மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்பழகன் மற்றும் ஆய்வுக்குழு ஆய்வாளா் அரவிந்தராஜ் ஆகியோா் தலைமையிலான குழுவினா் நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பணம், ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அங்கிருந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.