முகப்பு
கடலூர்

சிதம்பரம் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம்: ஜூன் 13-இல் தொடக்கம்

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

Updated On : 2 ஜூன் 2026, 5:26 am IST
பகிர்:

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

உற்சவ விபரம் வருமாறு: ஜூன் 14-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 15-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 16-ஆம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 18-ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 19-ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 20-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதிஉலாவும் நடைபெறுகிறது.

ஜூன் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தோ்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. ஜூன்.22 அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதிஉலா வந்த பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ஜூன் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் கமிட்டி செயலா் ஜெ.ஜயசூா்யா தீட்சிதா், துணை செயலாளா் ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்துள்ளனா்.