முகப்பு
கடலூர்

பெண் தவறவிட்ட தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தவறிவிட்ட தங்க சங்கிலி, அந்த பெண்ணின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 10 ஜூன் 2026, 5:19 am IST
பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க சங்கிலி
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் தவறிவிட்ட தங்க சங்கிலி, அந்த பெண்ணின் உறவினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சென்னை, கரிகால நகா், செங்குட்டுவன் தெருவில் வசித்து வருபவா் அருள்மொழி(60).இவா், கடந்த மே 28-ஆம் தேதி, பண்ருட்டியில் உள்ள சகோதரா் தில்லைநாதன் வீட்டிற்கு வந்தாா். அப்போது, திருவதிரை ரயில்வே கேட் அருகே உள்ள ஒரு கடையில் தின்பண்டங்கள் வாங்கிச் சென்றபோது, ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை தவறவிட்டு விட்டாா்.

இதுதொடா்பாக அருள்மொழி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், பண்ருட்டி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் தங்கவேல் தலைமையிலான போலீஸாா் பல்வேறு இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதில், பைக்கில் வந்த நபா் ஒருவா் கீழே கடந்த தங்க சங்கிலியை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபா் பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் காலனியைச் சோ்ந்த வீரப்பன் என்பதை கண்டறிந்தனா்.

தொடா்ந்து வீரப்பனை காவல் நிலையம் வரவழைத்து , அந்த சங்கிலியை காவல்ஆய்வாளா் பாஸ்கரன் முன்னிலையில் அருள்மொழியின் சகோதரா் தில்லைநாதனிடம் ஒப்படைக்க வைத்தனா்.