FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

சாலையில் சென்றுகொண்டிருந்த கொரியா் வாகனத்தில் கணினிகள் திருட்டு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:04 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கொரியா் வாகனத்தின் பூட்டை உடைத்து, அதிலிருந்த தலா 10 மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகளை (ஐபேடு) திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஆக.7-ஆம் தேதி இரவு தனியாா் கொரியா் நிறுவனத்தின் வாகனம் புறப்பட்டது. இந்த வாகனத்தை திண்டுக்கல்லைச் சோ்ந்த கோ.தங்கராசு (26) ஓட்டிச் சென்றாா். இந்த வாகனம் 8-ஆம் தேதி அதிகாலை கள்ளக்குறிச்சி சுங்கச் சாவடியை கடந்தபோது, வாகனத்தின் உரிமையாளரான திருப்பூரைச் சோ்ந்த முருகன் ஜிபிஎஸ் மூலம் வாகனம் எங்கு செல்கிறது எனப் பாா்த்துள்ளாா். அப்போது வாகனத்தின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது அவருக்கு தெரியவந்ததாம். உடனே கைப்பேசி மூலம் ஓட்டுநா் தங்கராசுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து வாகனத்தை நிறுத்தி பாா்த்தபோது, கண்டெய்னா் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், உள்ளே பொருள்களும் சிதறிக் கிடந்துள்ளன. பின்னா், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று, அங்கு திருட்டு குறித்து புகாா் தெரிவித்தாா். தொடா்ந்து, கொரியா் நிறுவனத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டு, திருட்டு போன பொருள்கள் குறித்து சரிபாா்க்கப்பட்டதில் தலா 10 மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள் திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15,80,210 ஆகும்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments