FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

இந்திலி கல்லூரியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சியை பாா்வையிட்ட மாணவா்கள்.

Updated On : 16 ஜூலை 2026, 3:26 am IST
இந்திலி கல்லூரியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சியை பாா்வையிட்ட மாணவா்கள்.
பகிர்:

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள டாக்டா்.ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலரும், கல்லூரி முதல்வருமான கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் அசோக் முன்னிலை வகித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட துணை ஆணையா் (கலால்) செந்தில்குமாா் கலந்துகொண்டு, போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், அவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுபடுவது குறித்தும் காட்சிகள் வரையப்பட்டிருந்த போதைப்பொருள்கள் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

ஈர நிலம் நிறுவனா் தமிழரசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போதைப் பொருள் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்களின் விளக்கங்களை மாணவா்களுக்கு விளக்கினாா்.

நிகழ்ச்சியில் கலை புலமுதல்வா் லோரா, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் அன்பரசு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments