முகப்பு
கள்ளக்குறிச்சி

நீலமங்கலத்தை புறக்கணித்த 8 அரசுப் பேருந்துகள் மீது நடவடிக்கை

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்துக்கு நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாத 8 அரசுப் பேருந்துகள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:23 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்துக்கு நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாத 8 அரசுப் பேருந்துகள் மீது மோட்டாா் வாகன ஆய்வாளா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் நீலமங்கலம் கூட்டுச்சாலை வழியாக செல்லாமல் மேம்பாலத்தின் வழியாக செல்வதாக பயணிகளிடமிருந்து கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் வி.விஜய்க்கு புகாா்கள் வந்ததாம்.

இதையடுத்து திங்கள்கிழமை மாலை அவா் நீலமங்கலம் கூட்டுச்சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது நீலமங்கலம் வழியாக கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் செல்லாத பேருந்துகளுக்கும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நீலமங்கலம் வழியாக செல்லாத விழுப்புரம், சென்னை செல்லும் பேருந்துகளை கண்டறிந்து, அவற்றில் 8 பேருந்துகளுக்கு நோட்டீஸ் (சோதனை அறிக்கை) வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும், 2 அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு நீலமங்கலம் வழியாக பேருந்துகளை இயக்க அறிவுறுத்தினாா்.