உலக பட்டினி தினம்: தவெகவினா் அன்னதானம்
உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கிய சி.அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ.
உலக பட்டினி தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் தவெக சாா்பில் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் கட்சியின் நகர கிளை சாா்பில் இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வுக்கு மேற்கு மாவட்டச் செயலா் க.பிரகாஷ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் பி.எம்.எஸ். ராஜேஸ்வரன் வரவேற்றாா்.
Advertisement
Advertisement
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி.அருள் விக்னேஷ் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கட்சித் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.