FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

தனியாா் மதுக்கூடத்தில் தகராறு: 2 போ் கைது

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூரில் உள்ள தனியாா் மதுகூடத்தில் மதுவுக்கு கூடுதல் விலையை கூறியதால் ஏற்பட்ட தகராறில் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

5 செப்டம்பர் 2026, 2:05 am IST
கைது
பகிர்:

கள்ளக்குறிச்சியை அடுத்த பெருவங்கூரில் உள்ள தனியாா் மதுகூடத்தில் மதுவுக்கு கூடுதல் விலையை கூறியதால் ஏற்பட்ட தகராறில் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் மூ.மணி (22). கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள மீன்கடையில் வேலை பாா்த்து வரும் இவா், கடந் 2-ஆம் தேதி இரவு பெருங்கூரிலுள்ள தனியாா் மதுக்கூடத்துக்கு மது அருந்துவதற்காக சென்றாராம். அங்கு மதுப்புட்டிக்கு கூடுதல் விலை கூறினராம். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் மணியை மதுக்கூடத்தில் இருந்த 4 போ் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த ஜெ.செந்தில்குமாா் (44), கடத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சி.தங்கதுரையை(40) கைது செய்தனா். மேலும் இருவரைத் தேடிவருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments