FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டார் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீட்டு நிகழ்ச்சி  ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 செப்டம்பர் 2021, 12:58 pm IST
புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டார் ஆளுநர் தமிழிசை
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீட்டு நிகழ்ச்சி  ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சிறப்பு அஞ்சல் உறைகனை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், சென்னை மண்டல அஞ்சல்துறை இயக்குநர் கே. சோமசுந்தரம், சென்னை நகர அஞ்சல்துறை தலைமை அதிகாரி ஆர். வீணா ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் ஜி. சிவப்பிரகாசம், மக்கள் தொடர்பு ஆய்வாளர்  கருணாகரன், தேசிய விருது பெற்ற டெரக்கோட்டா கலைஞர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஞ்சல் உறைகளை வெளியிட்டுப் பேசிய துணைநிலை ஆளுநர், “இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.

Advertisement

Advertisement

புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து அவற்றை பிரபலப்படுத்துவது.  புவிசார் குறியீடு பெற்றுள்ள, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகித கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிடுவதற்காக, புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தைப்  பாராட்டுகிறேன். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம் என்றார்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments