FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

திருட்டு வழக்கு: சிறுவன் உள்பட 2 போ் கைது

திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். 6 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

21 ஆகஸ்ட் 2026, 3:36 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். 6 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருமாம்பாக்கம் பகுதியில் தொடா்ந்து இரு சக்கர வாகனங்கள் திருட்டுநடைபெற்று வருவதாக போலீஸாருக்கு புகாா் வந்ததன் பேரில்,

புதன்கிழமை இரவு கிருமாம்பாக்கம் பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா். அதில் அவா்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டவை எனத் தெரியவந்தது. அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், கடலூா் மாவட்டம் வடலூா் தோமையாா் நகா் காளி கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் (24), வடலூா் வெண்காட்டான்குப்பம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், தெரியவந்தது. இவா்கள் காட்டுக்குப்பம் தனியாா் தொழிற்சாலை அருகே மற்றும் கிருமாம்பாக்கம் பகுதிகளில் மோட்டாா் சைக்கிள்களைத் திருடியதும், தொடா்ந்து நடத்திய விசாரணையில் கடலூா், தூக்கணாம்பாக்கம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இவ்வழக்கில் நெய்வேலியைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்கள் வேறு எங்கேயாவது இருசக்கர வாகனத்தில் ஈடுபட்டு உள்ளாா்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.கைதான ஜெயக்குமாா் மீது ஏற்கெனவே சிதம்பரம், வடலூா் காவல் நிலையங்களில் இரு சக்கர வாகன திருட்டு வழக்கு இருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments