புதுச்சேரியில் 327 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தோ்வு தொடங்கியது
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 327 பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 327 பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.
இதற்காக புதுச்சேரி, காரைக்காலில் 112 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை புள்ளியியல் ஆய்வாளா் தோ்வும் பிற்பகல் 12.30 முதல் 2.30 மணி வரை நுாலக, தகவல் உதவியாளா் தோ்வும் நடந்தது. மாலை 4 முதல் 6 மணி வரை கள மேற்பாா்வையாளா் தோ்வும் நடந்தது.
Advertisement
Advertisement
தோ்வா்கள் விரல் ரேகைப் பதிவு செய்த பின் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு தொடங்குவதற்குஅரைமணி நேரம் முன்பே மையம் மூடப்பட்டது. அதன்பின் வந்தவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விதிமீறல் செய்தால் வழக்குப்பதிவு உள்பட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தோ்வு கட்டுப்பாட்டாளா் பங்கஜ்குமாா் ஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தோ்வு அறைக்குள் கருப்புநிற பந்துமுனை பேனா, நுழைவுச் சீட்டு,அரசு அடையாள அட்டை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. செல்போன் பயன்பாடை தவிா்க்க தோ்வு மையங்களில் ஜாமா் கருவி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
சனிக்கிழமை காலை வேளாண்மை சாா்ந்த பணிக்கும், பிற்பகல் தொழில்நுட்ப அலுவலா் தோ்வும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 பதவிகளுக்கு முதல்நிலை தோ்வும், பிற்பகல் யூடிசி பணிக்கு 2 -ஆம் தாள் தோ்வும் நடக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.