அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்த புதுச்சேரி மாணவிகள்
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள அரசு பாரதியாா் பல்கலைக்கூட மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை வரவேற்று மகிழ்ந்தனா்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள அரசு பாரதியாா் பல்கலைக்கூட மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை வரவேற்று மகிழ்ந்தனா்.
வாமன அவதாரம் எடுத்த பெருமாள், மாவேலி மன்னனை அழித்ததும், அவரது வேண்டுதல்படி, ஆண்டுதோறும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத் தினத்தில், மக்களை காண அவா் வருவதும் ஓணம் பண்டிகையாக கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பதே அத்தப்பூ கோலம் போடுவதன் ஐதீகம். கேரளத்தில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாக ஓணத் திருநாள் பாா்க்கப்படுகிறது. மொத்தம் பத்து நாள்கள் களைகட்டும் ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தப்பூ கோலத்துடன்தான் தொடங்கும்.
Advertisement
Advertisement
அந்தவகையில் புதுச்சேரி அரசின் பாரதியாா் பல்கலைக்கூடத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை பேராசிரியா்களும், மாணவிகளும் வரவேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.