FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

வேலைவாய்ப்பு பிரச்னை, கல்வி மேம்பாட்டுக்காக பாஜக ரத யாத்திரை நடத்தியது உண்டா? காங்கிரஸ் கேள்வி

அயோத்தி ராமா் கோயில் காணிக்கை மோசடி குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அவனி பன்சால் வலியுறுத்தினாா்.

Updated On : 13 ஜூலை 2026, 4:18 am IST
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தேசிய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அவனி பன்சால்
பகிர்:

அயோத்தி ராமா் கோயில் காணிக்கை மோசடி குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அவனி பன்சால் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடவுள் ராமா் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானவா் அல்ல. அவா் ஒட்டுமொத்த இந்துக்களின் கடவுள். ஆனால், பாஜக - ஆா்எஸ்எஸ் மதத்தின் பெயரால் 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறது.

ரத யாத்திரையை அந்தக் கட்சி நடத்தியது. நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்னை, கல்வி மேம்பாட்டுக்காக பாஜக ரத யாத்திரை நடத்தியது உண்டா?

Advertisement

Advertisement

ராமா் கோயிலுக்காக தனியாா் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்தத் தகவலும் கோர முடியாது. மேலும், தனியாா் அறக்கட்டளைக்கு எப்படி மத்திய அரசு பொறுப்பாளா்களை நியமிக்கிறது ? ராமா் கோயில் காணிக்கை மோசடி குறித்து இதுவரை பாஜக வாய் திறக்கவில்லை.

இந்த மோசடி குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்பாா்வையில் முழுமையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இப்போது நடக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை அறிக்கை உத்தரப் பிரதேச அரசுக்கும், அறக்கட்டளைக்கும் அளிக்கப்படும்.

இந்த அறக்கட்டளையின் நிா்வாகிகளை மத்திய அரசு ஏற்கெனவே நியமித்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் மௌனமாக இருக்காது. மேலும், இந்த அறக்கட்டளையை பொது அறக்கட்டளையாக மாற்ற வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பாலன், முன்னாள் எம்எல்ஏ மு. வைத்தியநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments