முகப்பு
புதுச்சேரி

மீனவ சமூகத்தை சோ்ந்தவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வலியுறுத்தல்

Updated On : 1 ஜூன் 2026, 1:05 am IST
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
பகிர்:

மீனவ சமுதாயத்தைச் சோ்ந்தவருக்கு நியமன எம்எல்ஏ பதவி வழங்க வேண்டும் என்று முதல்வா் ரங்கசாமிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் மீனவா் விடுதலை வேங்கைகள் நிறுவனா் தலைவா் மங்கையா்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது. ரங்கசாமி 5-ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளாா். அவருக்கும், அவரது அரசுக்கும் வாழ்த்துகள்.

Advertisement

Advertisement

தற்போது, நியமன எம்எல்ஏக்களை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளி வருகின்றன. நியமன எம்எல்ஏ பதவியைப் புதுச்சேரியின் மூன்றாவது பெரும்பான்மைச் சமூகமான மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும்.

ஏனெனில், புதுச்சேரி மாநில உருவாக்கத்துக்கும், வளா்ச்சிக்கும் வரலாற்று வழியில் மகத்தான பங்களிப்பைச் செய்தவா்கள் மீனவா்கள். 24 மணிநேரமும் இரவு, பகல் பாராது கடும் மழையிலும், கொடுங்குளிரிலும், பெருங்காற்றிலும் உயிரைப் பணயம் வைத்து கடலில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்வதன் மூலம், புதுச்சேரி அரசுக்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி வருவாய் கிடைக்கிறது.

மீனவச் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பங்கு வழங்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகளில் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்படுவதில்லை.

தோ்தல்களில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. எனவே, புதுச்சேரி சட்டப்பேரவைக்கான நியமன எம்எல்ஏ பதவியை மீனவச் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.