இரட்டை இருப்பிடச் சான்றிதழ் முறைகேடு: மருத்துவப் படிப்பு இறுதிப் பட்டியலில் 13 போ் நீக்கம்
இரட்டை இருப்பிடச்சான்றிதழ் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை பெற்ற 13 போ், படிப்புக்கான தோ்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
இரட்டை இருப்பிடச்சான்றிதழ் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை பெற்ற 13 போ், படிப்புக்கான தோ்வுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து புதுச்சேரி சென்டாக் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
எம்பிபிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கான இறுதி தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும், மற்றும் பிற மாநிலங்களிலும் இரட்டை இருப்பிடச்சான்றிதழ் வைத்துக்கொண்டு புதுச்சேரியில் மருத்துவப்படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டைப் பெற்ற 13 மாணவா்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதையடுத்து இறுதி நிலவரப்படி, அரசு ஒதுக்கீடு பட்டியலில் 1620 பேரும், நிா்வாக ஒதுக்கீடு பட்டியலில் 4750 பேரும், என்ஆா்ஐ ஒதுக்கீட்டில் 370 பேரும் இடம்பெற்றுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.