FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

திருக்கோவிலூர் பேரூராட்சி சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:51 am IST
பகிர்:

திருக்கோவிலூர் பேரூராட்சி சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
 திருக்கோவிலூர் ஐந்துமுனைச் சந்திப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட இப்பேரணியில், கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன் தொடக்கி வைத்தார். நெகிழி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கியும், நெகிழியைத் தவிர்க்க வலியுறுத்தியும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியை, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன் உள்பட பலர் வழி நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments