இளம்பெண்ணை ஏமாற்றிய புகார்: காதலன் மீது வழக்கு
திருக்கோவிலூர் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய புகாரில், காதலன் உள்பட 2 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய புகாரில், காதலன் உள்பட 2 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூரை அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ் (24). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கிப் பழகினாராம். இந்த நிலையில், வேறு பெண்ணுடன் விக்னேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த காதலி அதிர்ச்சியடைந்து விக்னேஷிடம் நியாயம் கேட்டார்.
அப்போது, அவரது உறவினர்கள் அந்தப் பெண்ணை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், விக்னேஷ் உள்பட 2 பேர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.