சங்கை தமிழ்ச் சங்க சொற்பொழிவு நிகழ்ச்சி
சங்கராபுரத்தில் சங்கை தமிழ்ச் சங்கம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரத்தில் சங்கை தமிழ்ச் சங்கம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். உலக தமிழ்க் கவிஞர் பேரவை பொதுச் செயலர் புலவர் கு.சீத்தா, வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன், தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், நல்லாசிரியர் மு.முகமதுஉசேன், கல்லை தமிழ்ச் சங்க துணைச் செயலர் இல.அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா வரவேற்றார். நிகழ்ச்சியில் வள்ளலார் நெறி பரப்புநர் சிவஞான அடிகள், முனைவர் தே.சாந்தகுமார், மூவேந்தர் முத்தமிழ் கழகத் தலைவர் தி.ம.சுப்பிரமணியன், ஓவியர் மு.கலைச்செழியன், புலவர் பெ.சயராமன், திருவள்ளுவர் தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் ம.விசயஆனந்த், மருத்துவர் வை.நெடுஞ்செழியன், கவிஞர்கள் செ.வ.மதிவாணன், இரா.கதிர்வேல், ஆசிரியர் கோ.காயத்திரி ஆகியோர் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்
மு.கருணாநிதி பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன், திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன், தலைமை ஆசிரியர்கள் பெ.கலைச்செல்வி, சி.லட்சுமி, வணிகர் சங்கச் செயலர் கோ.குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் வ.விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர்கள் சண்முகம் பிச்சைப்பிள்ளை, செ.வ.மகேந்திரன் ஆகியோர் இசைப் பாடல்கள் பாடினர். சங்கப் பொருளாளர் தி.கோ.நரசிம்மன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.