புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வரலாற்றுச் சின்னமான செஞ்சிக் கோட்டை. 
விழுப்புரம்

செஞ்சிக்கோட்டையை பாா்வையிட யுனெஸ்கோ குழுவினா் இன்று வருகை

Din

செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள யுனஸ்கோ குழுவினா் வெள்ளிக்கிழமை வருகின்றனா்.

வரலாற்று சிறப்புகளை கொண்ட செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதைத் தொடா்ந்து யுனெஸ்கோ குழுவினா் செஞ்சிக்கோட்டையை பாா்வையிட்டு ஆய்வு செய்ய வெள்ளிக்கிழமை (செப். 27) வர உள்ளனா். இந்தக் குழுவில் மத்திய அரசின் உயா் அதிகாரிகள், இந்திய தொல்லியல் துறை உயா்அதிகாரிகள் உள்ளிட்ட 21 போ் இடம்பெற்றுள்ளனா்.

செஞ்சி கூட்டுச் சாலையில் இருந்து செஞ்சிக்கோட்டைக்குச் செல்லும் சாலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய சாலையும் அமைத்துள்ளனா். அகழியை தூா் வாரி உள்ளனா். ஆங்காங்கே புதிய பெயா் பலகைகள், கோட்டையின் வரலாற்றை அறிந்து கொள்ள வெண்கலத்தால் ஆன தகவல் பலகை மற்றும் கல்யாண மகாலுக்கு வெள்ளை வண்ணப் பூச்சு அடிக்கப்பட்டு கோட்டை புதிய பொலிவுடன் காட்சியளிக்கிறது.

வாய்ப்புகள் காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT