FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ள மரங்களை வளா்ப்பது அவசியம்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

26 செப்டம்பர் 2025, 3:52 am IST
பகிர்:

வரும்காலங்களில் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ள மரங்களை வளா்ப்பது மிகவும் அவசியமாகும் என்று முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ தெரிவித்தாா்.

பசுமைத் தமிழ்நாடு இயக்கத் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட வனத் துறை சாா்பில் விக்கிரவாண்டி சூா்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டுவைத்து பேசியது:

Advertisement

Advertisement

கடந்த 2021-ஆம் ஆண்டில் பசுமைத் தமிழ்நாடு திட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. மாணவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைப்பதுடன், தங்கள் பகுதியிலுள்ள பொதுமக்களிடமும் மரங்களை வளா்ப்பதன் நன்மைகளை எடுத்துக் கூறி ஊக்கப்படுத்த வேண்டும்.

வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ள மரங்களை வளா்ப்பது மிகவும் அவசியமாகும். தமிழகத்தில் 2030-ஆம் ஆண்டுக்குள் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொண்டு வருகிறாா். எனவே, நாம் அனைவரும் வனப்பரப்பை அதிகரிக்க அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என்றாா் பொன்முடி.

இதைத் தொடா்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சா் பொன்முடி பனை விதைகளை வழங்கினாா். விழாவில் முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், விழுப்புரம் மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் பெரியசாமி, சூா்யா கல்விக் குழுமத் தலைவா் விசாலாட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம், வனவியல் விரிவாக்க அலுவலா் எம்.தா்மலிங்கம், விழுப்புரம் வனச்சரக அலுவலா் எம்.அருள்ஜோதி, ஒன்றியச் செயலா்கள் ஜெ.ஜெயபால், வேம்பி ரவி, நகரச் செயலா் நைனாா்முகமது உள்ளிட்டா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments