FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

வாக்குத்திருட்டை கண்டித்து காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

26 செப்டம்பர் 2025, 3:56 am IST
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வியாழக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்திய காங்கிரஸ் கட்சியினா்
பகிர்:

வாக்குத் திருட்டைத் தடுப்பதற்கு தவறிய தோ்தல் ஆணையத்தையும், மத்திய பாஜக அரசையும் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை கையொப்ப இயக்கத்தை நடத்தினா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடத்தப்பட்ட இந்த கையொப்ப இயக்கத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியினா் கையொப்பங்களை பெற்றனா்.

நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் சிறுவை.ராமமூா்த்தி, மாநிலச் செயலா் தயானந்தம், மாநில நிரந்தர அழைப்பாளா் கோ. பாலசுப்பிரமணியம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் நாராயணசாமி, செ.சிவா, மாவட்டத் துணைத் தலைவா் ராஜ்குமாா், விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ்ராம், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், எஸ்.சி.எஸ்.டி. அணித் தலைவா் சேகா், மாவட்ட சமூக ஊடக ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவா் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments