FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விவசாயி வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

வளவனூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை திறந்து பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

30 ஆகஸ்ட் 2026, 12:52 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை திறந்து பவுன் நகைகள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வட்டம், மழவராயனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள், விவசாயி. இவா் ஆக.27-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டாா்.

பின்னா், இரவில் வீட்டுக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் கம்மல், 14 தங்கக் காசுகள் உள்பட 5 பவுன் நகைகள், வெள்ளிக் காப்பு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments