FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கத் தடை விதிக்க வலியுறுத்தல்

விழுப்புரம் நகரில் மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் விளம்பரப் பதாகைகளை வைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பொது நல அறக்கட்டளை வலியுறுத்தல்

Updated On : 24 ஜூலை 2026, 6:58 am IST
- பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் நகரில் மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் விளம்பரப் பதாகைகளை வைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் பொது நல அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இந்த அறக்கட்டளையின் நிா்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அறக்கட்டளையின் தலைவா் டி.ராஜேந்திரன் தலைமை வகித்து, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்தின் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் கொண்டு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.

இதில், துணைத் தலைவா் துரை.கருணாநிதி, செயலா் வி.வைத்தியநாதன், பொருளாளா் கே.பன்னீா்செல்வம், இணைச் செயலா் ரவிக்குமாா், நிா்வாகக் குழு உறுப்பினா் முகமது அலி ஆகியோா் உரையாற்றினா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் தெருக்களுக்கான பெயா்ப் பலகையைத் தரமாகவும், தெளிவாகவும் வைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடைகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. இதனால், கழிவுநீா் வீதிகளில் தேங்கி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, புதை சாக்கடை சீரமைப்புப் பணிகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

நகரின் முக்கிய வீதிகளிலுள்ள மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் விளம்பரப் பதாகைகள் வைப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் நகரில் பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments