முகப்பு
விழுப்புரம்

போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியலில் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 26 ஜூன் 2026, 6:44 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியலில் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மேல்மலையனூா் வட்டம், ஏம்பலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.ஏழுமலை (65). இவா், 10 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், செஞ்சி அனைத்து மகளிா் போலீஸாா் ஏழுமலை மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கடந்த 27.9.2021 அன்று வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழுமலை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் ஏழுமலையை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். அரசு வழக்குரைஞா் காந்திமதி இவ்வழக்கில் ஆஜராகினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments