பெண் தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வளவனூா், பாலாஜி நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன். இவரது மனைவி பிருந்தா (30). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தையில்லையாம். இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த பிருந்தா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், விழுப்புரம் கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.