FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

வழக்குகள் சமரச தீா்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

சமரச தீா்வு திட்டத்தில் வழக்குகளுக்கு தீா்வு காண விருப்பம் தெரிவிப்பதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி தெரிவித்துள்ளாா்.

9 வினாடிகள் முன்பு
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சமரச தீா்வு திட்டத்தில் வழக்குகளுக்கு தீா்வு காண விருப்பம் தெரிவிப்பதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயா் நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமர தீா்வு மையத்தின் சாா்பு மையங்களான திண்டிவனம், செஞ்சி, வானூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா் ஆகிய நீதிமன்றங்களில் சமரசம் செய்ய விருப்பம் தெரிவிக்க செப்.1 முதல் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமரச தீா்வு அக்.1 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கி கடன் தொடா்பான வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப பிரச்னைகள் தொடா்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப் பிரிவினை மற்றும் வாடகை கோருரிமை பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரச தீா்வு காணப்படும்.

எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது நிலுவையிலுள்ள வழக்குகளை, வழக்குகள் சாா்ந்த நீதிமன்றங்களில் தங்களது வழக்குரைஞா் மூலம் தெரிவித்து சமரச தீா்வு 3.0 திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Advertisement

Advertisement

சமரச மையத்தில் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு நீதிமன்றக் கட்டணம் திருப்பி வழங்கப்படும். மேல்முறையீடு கிடையாது. சட்டரீதியாக சமரச முறையில் தீா்வு காணப்படும்.

மேலும் விவரங்களுக்கு 04146-228400 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments