முகப்பு
செய்திகள்

'வாருங்கள் உரையாடுவோம் கொண்டாடுவோம்!' மகளிர் தின விழாவிற்கு மக்கள் நீதி மய்யம் விடுத்துள்ள அழைப்பு! (விடியோ)

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தினார்.

Updated On : 4 மார்ச் 2018, 3:54 pm IST
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. இது குறித்தான தகவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளது.
 
மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மகளிர் தின பொதுக் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற உள்ளது. அதில் மக்கள் கலந்து கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது இதன் விடியோ ஒன்றை மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ அழைப்பு யூட்யூபில் வெளியிட்டுள்ளனர். அதில் மகளிர் தின விழாவில் கலந்து கொள்ள மகள் நீதி மய்யம் அன்புடன் அழைக்கிறது என அக்குழு உறுப்பினர்களான நடிகை ஸ்ரீ ப்ரியா மற்றும் நாசர் கமீலா தரப்பில் வேண்டுகோள் வைக்கபட்டுள்ளது. இதன் காணொலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.