நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகும் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் 'டான்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, பால சரவணன், சிவாங்கி, மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதையும் படிக்க| 'விக்ராந்த் ரோனா' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
இதன் ஒரு பகுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படமும் காதலர் தினத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயனின் 'எதிர் நீச்சல்' படமும், விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' படமும் ஒரே நாளில் வெளியாகின. அதுபோலவே 'ரெமோ' மற்றும் றெக்க படங்களும் ஒரே நாளில் வெளியாகின. இதனையடுத்து எம்ஜிஆர் - சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் - கமல்ஹாசன், விஜய் - அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி ஆகியோரும் இடம் பெறுவர் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி முற்றிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.