'சமந்தாவின் நடனத்தால் சூடாகவிருக்கும் குளிர் காலம்': அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பாடல் பற்றிய தகவல்
அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியுள்ள பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். இந்தப் பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், இந்த குளிர்காலம் சமந்தாவின் நடனத்தால் சூடாகப்போகிறது. புஷ்பா படத்தில் இருந்து ஓ சொல்றியா ஓஓ சொல்றியா பாடல் நாளை (டிசம்பர் 10) வெளியாகவிருக்கிறது. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' உருவாகும் விதம்: விடியோ வெளியிட்ட ரஹ்மான்
Advertisement
Advertisement
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.