அடுத்த படத்துக்காக ஹிந்திப் பட பிரபலத்துடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சிங்கப் பாதை படத்துக்காக ஹிந்திப் பட ஒளிப்பதிவாளர் டட்லியுடன் இணையவுள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது சிங்கப் பாதை படத்துக்காக ஹிந்திப் பட ஒளிப்பதிவாளர் டட்லியுடன் இணையவுள்ளார்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளில் சமீபத்தில் பங்கேற்றிருந்தார்.
டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற ஷிவாங்கி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | பாரதி கண்ணம்மா - ப்ரமோ மட்டுமே போதுமா? குழப்பத்தில் தவிக்கும் கதை
இந்தப் படத்தையடுத்து அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் என்பவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு சிங்கப் பாதை எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் டட்லி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ஜூங்கா, ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த பூமி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஹிந்தியில் சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ், கோல்மால் 3 ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.