திருமணம் எனக் கூறி ஏமாற்றிய யாஷிகா
நடிகை யாஷிகா தனக்கு திருமணம் என கூறி ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.
விபத்துக்கு பிறகு நடிகை யாஷிகா மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது, புகைப்படங்கள் பகிர்வது என பரபரப்பாக இயங்கி வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. இதனை மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன். எனது அம்மாவும் அப்பாவும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். திருமணம் செய்வதற்கு இது சரியான தருணம். நான் சினிமாவை நேசிக்கிறேன். அதனால் நான் உங்களைத் தொடர்ந்து மகிழ்விப்பேன்.
இதையும் படிக்க | வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' - திரை விமர்சனம்: திருமணத்தை மீறிய உறவினால் மாட்டிக்கொண்டால்?
இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனக்கு காதல் எல்லாம் ஒத்துவராது. உங்கள் ஆசிர்வாதங்கள் தேவை'' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் சில மணி நேரங்களுக்கு பிறகான மற்றொரு பதிவில், ''எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள தின வாழ்த்துகள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொள்வது என்ற எண்ணமே எனக்கு இல்லை' என்று தெரிவித்துள்ளார்.