மஞ்சு வாரியர் ஏமாற்றப்பட்டாரா? ரசிகர்கள் கிண்டல்!
துணிவு படத்தின் இரண்டாம் பாடலில் நடிகை மஞ்சு வாரியரின் குரலே இல்லை என சமூக வலைதலங்களில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: அஜித் முதுகுல குத்திட்டாங்க: ரசிகர்கள் கிண்டல் !
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாடல் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வைசாக் எழுதியுள்ள இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது. வைசாக், மஞ்சு வாரியர் இணைந்து பாடியுள்ளனர்.
Advertisement
Advertisement
ஆனால் இந்தப் பாடலில் மஞ்சு வாரியர் எங்கு பாடியிருக்கிறாரென்றே தெரியவில்லை. இதனை சமூக வலைதளங்களில் மீம்ஸ் பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். சிலர் மஞ்சு வாரியர் இனிமையான குரல் கேட்டு மகிழ்ந்தவர் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: கங்கனாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ‘எமர்ஜென்சி’ படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்குமா?
Related Article
‘பெண்கள் துர்கையம்மனின் உருவங்கள்’- நடிகைகளுக்கு ஆதரவளித்த திவ்யா!
'நான் அந்த மாதிரி பெண் இல்லை' - சீறும் டாப்ஸி: காரணம் என்ன?
நடிகர் அசோக் செல்வன் ‘நாய்’ என குறிப்பிட்டது இந்த விமர்சகரையா?
மஞ்சு வாரியர் குரலில் துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியானது!
யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?