68வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகராக சூர்யா தேர்வு - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான 68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட தயாரிப்புக்கு சாதகமான சூழல் நிலவும் மாநிலமாக மத்திய பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறை தொடர்பான சிறந்த புத்தகமாக தி லாங்கஸ்ட் கிஸ் என்ற புத்தகத்துக்கு கிடைத்துள்ளது.
சிறந்த தெலுங்குப் படமாக கலர் போட்டோவும், சிறந்த தமிழ் படமாக சிவரஞ்சனியும் சில பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இசையமைப்பாளராக அல வைக்குந்தபுரமுலோ படத்துக்காக தமன் மற்றும் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சூர்யாவின் ‘சூரரைப் போற்று' விமர்சனம்: கனவுகள் விதைக்கும் பரவச அனுபவங்கள்!
Advertisement
Advertisement
சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக ஸ்ரீகர் பிரசாத் பெற்றார். சிறந்த தமிழ் படமாக சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த சண்டைப் படமாக மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சூரரைப் போற்று: நம்பிக்கையளித்த வெற்றி
சிறந்த பொழுதுபோக்கு படமாக ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி படம் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை தன்ஹாஜி படத்துக்காக அஜய் தேவ்கனும் பெறுகிறார். சிறந்த பின்னணி பாடகிக்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக நஞ்சம்மா பெறுகிறார். சிறந்த இயக்குநராக அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக சச்சிதானந்தன் கே.ஆர் பெறுகிறார். சிறந்த துணை நடிகராக அய்யப்பனும் கோஷியும் பிஜு மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.