முகப்பு
செய்திகள்

'இன்று மட்டுமல்ல...'' - நயன்தாராவின் படத்தைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து

மகளிர் தினத்தையொட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

Updated On : 8 மார்ச் 2022, 3:56 pm IST
பகிர்:

மகளிர் தினத்தையொட்டி இயக்குநர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,

''இது நம் வாழ்க்கையில் உள்ள பெண்ணுக்காக. அவர்கள் நம்மை உருவாக்குபவர்கள், நம்மை முழுமை அடையச் செய்பவர்கள். நம் வாழ்க்கை மற்றும் நாம் செய்யும் அனைத்துக்கும் அர்த்தம் அளிப்பவர்கள். இன்று மட்டுமல்ல. ஒவ்வொரு நாளும் அவர்களுடைய நாள்தான். 

செயல்கள் வார்த்தைகளை சத்தமாக பேசும். ஆகையால் இந்த இடத்தை நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்காக அழகான இடமாக மாற்றுவோம். அழகான, தைரியமான, உறுதியான, சிறப்பான பெண்கள் அனைருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement

விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தயாரித்து வருகிறார். 

மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தங்களது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக கனெக்ட், கவின் நடிக்கும் ஊர் குருவி உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகின்றனர். இதில் கனெக்ட் திரைப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்க நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments