காவலரைக் கரம் பிடித்த நடிகை
தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றும் அருண் குமாரை திருவண்ணாமலையில்...
தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுபவரைத் திருமணம் செய்துள்ளார் நடிகை அகல்யா வெங்கடேசன்.
2014 முதல் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றி கவனம் பெற்றவர் அகல்யா வெங்கடேசன். தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம், யானை போன்ற பல படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றும் அருண் குமாரை திருவண்ணாமலையில் இன்று திருமணம் செய்துள்ளார் அகல்யா. திருமண வரவேற்பு வரும் 8-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சமூகவலைத்தளத்தில் தனக்குத் திருமணமானது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் அகல்யா.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.