முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 5 அக்டோபர் 2022, 4:39 pm IST
பகிர்:

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கத்தில், சந்தரா ஆர்ட்ஸ் தயாரிப்பில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையில் வெளியாகும் எனப் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், மறைந்த நடிகர் விவேக்  மற்றும் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு தீபாவளிக்கே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி விஜய தசமி  வாழ்த்துக்களுடன் இப்படத்தின் அறிவிப்பை தன்னுடைய சுட்டுரை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments