திருமணம் செய்யவிருக்கும் பிரபல சீரியல் ஜோடி!
சின்னத்திரை நடிகர்களான பிரிட்டோ மனோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
சின்னத்திரை நடிகர்களான பிரிட்டோ மனோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ராஜா ராணி 2 சீரியல் புகழ் பிரிட்டோ, தவமை தவமிருந்து சீரியலில் உடன் நடித்த சந்தியாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவித்தார். இவர்களது நிச்சயதார்த்தம் ஜனவரி 25 ஆம் தேதி நடந்தது.
சந்தியா ராமச்சந்திரன் தங்களது நிச்சயதார்த்த விழாவில் பிரிட்டோவுடனான படத்தைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
சின்னத்திரை நடிகர் பிரிட்டோ மனோ அரசியல்ல இதெல்லாம் சதாரணமப்பா என்ற தமிழ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு சின்ன தம்பி என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
இதையும் படிக்க: பிப்.14-ல் பொன்னியின் செல்வன் 2 குறித்து சூப்பர் அப்டேட்!
தொடர்ந்து, விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார். இது தவிர ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரிட்டோவுக்கு ஆர்வம் உண்டு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.