முகப்பு
செய்திகள்

வாரிசு டிரைலர்: மீம்ஸ், கிண்டல்களுக்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பதில்! 

வாரிசு படத்தின் டிரைலர் குறித்தும், தெலுங்கில் தள்ளிப் போவதற்கான காரணங்களையும் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ளார். 

Updated On : 9 ஜனவரி 2023, 5:38 pm IST
பகிர்:

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.  வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கிய உடனேயே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரசுடு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். 

ஏற்கெனவே வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சீரியல் மாதிரி இருக்கிறது, பல தெலுங்கு படங்களின் சாயல் இருக்கிறதென விமர்சனங்கள் வந்தது. தெலுங்கில் காலம் தாழ்த்தி ரிலீஸானால் படம் வசூலிக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியதாவது:

மொத்தமாக பார்க்கும் போது படம் எப்படி இருக்கும் என்பதே முக்கியம். டிரைலர் படத்தின் வசூலை முடிவு செய்வதில்லை. டிரைலர் டிரைலர்தான். 2 மணி நேரம் 40 நிமிடத்தில் மக்களை சிரிக்க வைக்கிறோம், அழுக வைக்கிறோம். அதனால் டிரைலரை வைத்து முடிவு செய்ய முடியாது. படம் மக்களை கனென்க்ட் செய்ய வேண்டும். வாரிசு இதைக் கண்டிப்பாக செய்யும். வழக்கமான குடும்ப படமாக இருந்தாலும் இந்தப் படத்தில் புதியதாக ஒரு விஷயத்தை கூறியுள்ளோம். 

காந்தாரா, லவ் டுடே மாதிரி படங்கள் காலம் தாழ்த்தி ரிலீஸானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்தப் படமும் தெலுங்கில் காலம் தாழ்த்தி ரிலீஸானாலும் பிரச்னையில்லை. மக்களுக்குப் பிடிக்கும், நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments