இயக்குநர் சாய் ராஜேஷ் நீலம் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘பேபி’.
காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்ப்டத்தில் வைஷ்ணவி சைதன்யா நாயகியாக நடித்திருந்தார். நாகேந்திரபாபு உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.
ரூ.10 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகி கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான இப்படம் ரூ.90 கோடி வரை வசூலித்து வெற்றியடைந்தது.
இதையும் படிக்க: எம்.ஜி.ஆர். கெட்டப்பில் வரும் கார்த்தி!
விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதனையடுத்து இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வந்தன.
இந்நிலையில் பேபி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோகிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழில் இளம் நடிகர் ஒருவர் இதில் நாயகனாக நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.