செவ்வந்தி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்!
செவ்வந்தி சீரியல் நடிகை ரம்யா கெளடாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
செவ்வந்தி சீரியல் நடிகை ரம்யா கெளடாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'செவ்வந்தி'. இந்த தொடரில் திவ்யா ஸ்ரீதர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும், இத்தொடரில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்தவந்த ரம்யா கெளடா திடீரென விலகினார். செவ்வந்தி சீரியலில் இருந்து ரம்யா கெளடாவின் விலகல் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
Advertisement
இந்த நிலையில், ரம்யா கெளடா தனது நீண்ட நாள் காதலர் பார்கவை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, அவர்களுக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.