‘அரண்மனை 4’: விஜய் சேதுபதி கதாநாயகனா?
இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, வினய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பேய்ப் படங்களுக்கென்று தனியான ரசிகர்கர்கள் இருக்கிறார்கள். இதனால் அரண்மனை 2 திரைப்படம் 2016இல் த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து இயக்கினார்.
பின்னர் இந்தப்படமும் வெற்றியை தொடர்ந்து 2021இல் அரண்மனை 3 எடுக்கப்பட்டது. இதில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், அரண்மனை 4 குறித்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ‘8 வருஷமாக அஜித்தை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன்’- இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேதனை!
இயக்குநர் சுந்தர் சி தற்போது தலைநகரம் 2 படத்தினை இயக்கி வருவது குறிப்பிட்டத்தக்கது.
சமூக வலைதளங்களில் அரண்மனை 4 படம் குறித்து பாராட்டுப் பதிவுகளாகவும், இதுக்கு இல்லையா ஸார் எண்டு என கிண்டல்களாகவும் மீம்ஸ்கள் அதிகரித்து வருகின்றன.