முகப்பு
செய்திகள்

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய கயல் சீரியல்! டிஆர்பியில் முதலிடம்!!

டிஆர்பி என்பது, மக்கள் எந்த தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கிறார்கள், எந்த நிகழ்ச்சி / தொடரை அதிக நேரம் பார்க்கிறார்கள் என்பதைக் கணக்கிடுவதாகும்.

Updated On : 7 செப்டம்பர் 2023, 5:20 pm IST
பகிர்:


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத்தள்ளி கயல் தொடர் டிஆர்பி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் இன்று (செப். 7) வெளியானது. இதில் தமிழின் முன்னணி தொடர்கள் பலவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஒருசில தொடர்கள் குறைந்த டிஆர்பி பெற்று பட்டியலில் பின்தங்கியுள்ளன. 

டிஆர்பி (டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட்) என்பது, மக்கள் எந்த தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்கிறார்கள், அதில் எந்த நிகழ்ச்சி / தொடரை அதிக நேரம் பார்க்கிறார்கள் என்பதைத் தரவுகள் அடிப்படையில் கணக்கிடுவதாகும். மாதமொருமுறை இவை கணக்கிடப்படுகின்றன. தொடர்களுக்கு வாரமொருமுறை கணக்கிடப்படுகின்றன. 

Advertisement

Advertisement

அந்தவகையில் இந்த வாரத்துக்கான டிஆர்பி பட்டியலில் கயல் தொடர் முதலிடம் பிடித்துள்ளது. இத்தொடர் டிஆர்பியில் 11.06 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக எதிர்நீச்சல் தொடர் உள்ளது. எதிர்நீச்சல் தொடர் 10.42 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடரை, கயல் முந்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாகவே கயல் - எதிர்நீச்சல் தொடர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இரு தொடர்கள்தான் மாறிமாறி முதலிடத்திற்கு போட்டிபோட்டு வருகின்றன. 

எதிர்நீச்சல் 

இந்த இரு தொடர்களுக்கு முன்பு, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. அந்தத் தொடர் கடந்த ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments