கோட் படத்தின் முதல் பாடலுக்கு நடிகர் விஜய் கூறியது என்ன தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் படத்தின் முதல் பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் படத்தின் முதல் பாடல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது. தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் முதல் பாடல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஒரே நாளில் அதிக லைக், பார்வைகளை கடந்து சாதனைப் படைத்து வருகிறது.
இந்நிலையில் இதன் பாடலாசிரியர் மதன் கார்க்கி நேர்காணல் ஒன்றில், “கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள பாடல்களுக்கும் முதலில் இப்படித்தான் கலவையான விமர்சனம் வந்தது. ஆனால் பின்னர் அது கல்ட்டாக மாறியது. இந்தப் பாடலின் முக்கியக் காரணம் அனைவரையும் நடனமாட வைக்க வேண்டும். எல்லா பாடல்களும் எனக்கு ஒரு பரிசோதனை முயற்சிதான். அதனால் கலவையான விமர்சனம் என்பது இயல்பான ஒன்றுதான்.
பாடல் குறித்து வெங்கட் பிரபு, ‘ஒரு நிகழ்வுக்குப் பிறகு 4 நண்பர்கள் கொண்டாடும் ஒரு பார்டி பாடல் வேண்டும்’ என மட்டும் கூறினார். நடிகர் விஜய் பூஜையின்போது, ‘பாடல் நன்றாக இருக்கிறது. நன்றி’ எனக் கூறினார்” எனப் பேசியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.