முகப்பு
செய்திகள்

விலங்கு வெப் தொடர் இயக்குநருடன் இணையும் நடிகர் சூரி!

நடிகர் சூரியின் புதிய படத்தின் அறிவிப்பு.

Updated On : 19 ஆகஸ்ட், 2024 at 12:57 PM
நடிகர் சூரி
பகிர்:

விலங்கு வெப் தொடர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூரி நடிக்கவுள்ளார்.

நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து கருடன் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமானதால், கதைநாயகனாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அடுத்ததாக, இவர் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் ஆக.23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இணையத் தொடரில் சூரி நாயகனாக அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரியின் வெளியிட்டுள்ளப் பதிவில், “கருடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் கே. குமாருடன் இணைகிறேன்.‌ இத்திரைப்படத்தை 'விலங்கு' இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →